Rain Update for Tamilnadu - தமிழக அளவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழைப் பொழிவைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகங்கை, ராதநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறகநகர்ப் பகுதிகளில் வானம், மேகமூட்டத்துன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தின் கூனூர் பகுதியில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.