Heavy Rain Alert for TN - அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிக்கையில், “தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.