Read in English
This Article is From Oct 30, 2019

கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Edited by

கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழை காரணமாக மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலை பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விடிய விடிய மழை கொட்டிய போதும், இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement