This Article is From Jun 25, 2020

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை: இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை: இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தின் தேவக்கோட்டையில் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு
  • மேற்கு மாவட்டங்களில் தினமும் நல்ல மழை பெய்து வருகிறது
  • சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வரும் நிலையில், 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம், ‘தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்,

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்

அடுத்த 48 மணி நேரத்திற்குத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தின் தேவக்கோட்டையில் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகங்கையின் காரைக்குடியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.