This Article is From Sep 27, 2019

மலையின் மீது மோதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!! 2 பேர் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசத்தின் கிம்ரு நகரில் இருந்து ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. மதியம் 1 மணியின்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை ஹெலிகாப்டர் இழந்தது.

மலையின் மீது மோதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!! 2 பேர் உயிரிழப்பு!

விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

New Delhi:

இந்திய ராணுவத்தின்  பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 

அருணாசல பிரதேச மாநிலம் கிம்ரு நகரில் இருந்து, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. கிழக்கு பூடான் அருகே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது யோன்பிலோ என்ற நகரை ஹெலிகாப்டர் அடைந்தது. 

மதியம் சுமார் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு ஹெலிகாப்டரில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால், அதற்கு என்ன ஆனது என்று அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் மலை ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் சுக்கு நூறாக நொருங்கிப் போயுள்ளது. 

அதில் இருந்த 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எதனால் இந்த சம்பவம் நடந்தது என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

.