New Delhi:
இந்திய ராணுவத்தின் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
அருணாசல பிரதேச மாநிலம் கிம்ரு நகரில் இருந்து, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. கிழக்கு பூடான் அருகே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது யோன்பிலோ என்ற நகரை ஹெலிகாப்டர் அடைந்தது.
மதியம் சுமார் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு ஹெலிகாப்டரில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால், அதற்கு என்ன ஆனது என்று அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் மலை ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் சுக்கு நூறாக நொருங்கிப் போயுள்ளது.
அதில் இருந்த 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எதனால் இந்த சம்பவம் நடந்தது என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
COMMENTS
Advertisement