Read in English
This Article is From Oct 30, 2018

தீவிர தேர்தல் பிரசாரத்திற்கு இடையே ஐஸ்கிரீம் பிரேக் எடுத்த ராகுல்!

கருப்பு நிற டீ-ஷர்ட்டில் புன்னகையுடன் காணப்பட்ட 47 வயதான காங்கிரஸ் கட்சி தலைவர் ஐஸ்கிரீமிற்காக பிரபலமான கடை ஒன்றில் காத்திருந்தார்

Advertisement
இந்தியா

ஐஸ்கிரீம் தயாரிக்கும் நபரை பார்த்துக் கொண்டிருந்த ராகுல்.

Indore:

மத்திய பிரதேசத்தில் காரசாரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு பின், இந்தூரில் ஐஸ்கிரீம் பிரேக் எடுத்துக் கொண்டார் ராகுல் காந்தி. கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து புன்னகையுடன் காணப்பட்ட 47 வயதான காங்கிரஸ் தலைவர், பிரபலமான ஐஸ்கீரிம் கடையான ‘56 டுகன்'-னில் தன்னுடைய ஐஸ்கிரீம் வருவதற்காக காத்திருப்பது போன்ற வீடியோ காங்கிரஸ் கட்சியினரால் டிவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டது.

அதில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உடன் இருந்தார்கள். அப்போது அங்கு வந்த சிறுவனுக்கு ராகுல் காந்தி ஐஸ்கிரீம் ஊட்டி விட்டார்.

 

உஜ்ஜயினில் உள்ள மஹாகாலீஸ்வர கோவிலில் ராகுல் காந்தி.

உஜ்ஜயினில் உள்ள மஹாகாலீஸ்வர கோவிலில் பாரம்பரிய உடையுடன் பூஜையில் பங்கேற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதுகுறித்து கேள்வி எழுப்பிய பாஜக செய்தி தொடர்பாளர், ராகுல் காந்தி பூனுல் அணிந்திருக்கிறார் அப்படியானல் அவரிடம் நாங்கள் ஒன்றை கேட்க வேண்டும். அவருடைய கோத்திரம் என்ன?

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நவம்.28ல் தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்.11ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement