বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 30, 2020

'கோவிட் -19 மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு தீர்வாக இருக்க முடியாது': மத்திய அரசு!

இங்கிலாந்தில் ஒன்று, அமெரிக்காவில் ஒன்று மற்றும் சீனாவில் ஒன்று என மூன்று தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அவை வெற்றி பெறுமாயின் தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பரிசோதனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • நாடு முழுவதும் கொரோனா 16 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது
  • மந்தை நொயெதிர்ப்பு கொரோனாவை பொறுத்த அளவில் இது சாத்தியப்படாது
  • இந்தியா 3.6 சதவிகிதம் அதிக நோய் பரவல் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கையில், தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தி எனப்படும் ஹெர்டு இம்யூனிட்டியை நம்ப முடியாது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், தடுப்பூசி மூலமாகவே தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

“பொதுவாக மந்தை நொயெதிர்ப்பு மக்களை ஒரு குறிப்பிட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. ஆனால், கொரோனாவை பொறுத்த அளவில் இது சாத்தியப்படாது. நமக்கு தடுப்பூசி மிக அவசியமாகும்.” என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மந்தை நோயெதிர்ப்பு திறன் என்பது சமூகத்தில் குறிப்பிட்ட அளவில் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு தானாகவே குணமடைந்து இருப்பார்களானார் அச்சமூகம் மந்தை நோயெதிர்ப்பு திறனை பெறும். எனவே அச்சமூகத்தில் உள்ள இதர மக்கள் நோயால் பாதிக்கப்பட்டாலும் விரைவில் குணமடைந்துவிடுவார்கள். இதையே மந்தை நோயெதிரப்பு திறன் என்கிறோம்.

Advertisement

இந்தியா தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைவிட இந்தியா 3.6 சதவிகிதம் அதிக நோய் பரவல் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பிரேசிலில் இது 2.3 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய சுகாதாரத்துறை அடிக்கோடிட்டு வருகின்றது.

முன்னதாக மும்பையில் கிட்டத்தட்ட 7,000 பேருக்கு நடத்திய மருத்துவ ஆய்வில், நகரத்தின் நெரிசலான சேரிகளில் வசிக்கும் மக்களில் 57 சதவீதம் பேர் கோவிட் -19 இருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்கள் அல்லது அதிலிருந்து குணமடைந்தவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மந்தை நோயெதிர்ப்பு திறன் குறித்து விவாதம் மேலெழுந்தது.

Advertisement

இந்தியாவின் இறப்பு விகிதம் ஜூன் 18 அன்று 3.3 சதவீதத்திலிருந்து இன்று 2.21 சதவீதமாக குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் சராசரியாக 4.68 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றை பொருத்த வரையில் 21 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை(positivity) விகிதம் உள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

Advertisement

உலகில் தற்போது 24 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் 2 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒன்று, அமெரிக்காவில் ஒன்று மற்றும் சீனாவில் ஒன்று என மூன்று தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அவை வெற்றி பெறுமாயின் தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பரிசோதனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement