This Article is From May 01, 2020

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: என்ன நிலைமை… முழு விவரம் (30.04.20)!

தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 138 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,323 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: என்ன நிலைமை… முழு விவரம் (30.04.20)!

Coronavirus in Chennai: தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 138 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,323 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (30.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 16

மணலி - 2

மாதவரம் - 4

தண்டையார்ப்பேட்டை - 77

ராயபுரம் - 199

திரு.வி.க நகர் - 210

அம்பத்தூர் - 27

அண்ணா நகர் - 86

தேனாம்பேட்டை - 105

கோடம்பாக்கம் - 97

வளசரவாக்கம் - 40

ஆலந்தூர் - 9

 அடையாறு - 20

பெருங்குடி - 9

சோழிங்கநல்லூர் - 3

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 2

மே 1-ம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 906 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் 199 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 105 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 97 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 86 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

.