This Article is From Jun 17, 2020

சென்னையில் கொரோனா தொற்று: ஒரே நாளில் 40 பேர் மரணம்; மண்டலவாரியாக பாதிப்பு விவரம்!

ஜூன் 17 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 34,245 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,565 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Highlights

  • தமிழகத்தில் இதுவரை 528 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • சென்னையில் இதுவரை 422 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • நேற்று தமிழகத்தில் மொத்தமாக 49 பேர் கொரோனாவால் பலி

தமிழகத்தில் நேற்று 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 919 பேர். ஒட்டுமொத்த அளவில் 48,019 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,438 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 26,782 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 20,706 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 528 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (16.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,258

Advertisement

மணலி - 483

மாதவரம் - 922

Advertisement

தண்டையார்பேட்டை - 4,370

ராயபுரம் - 5,486

Advertisement

திரு.வி.க நகர் - 3,041

அம்பத்தூர் - 1,190

Advertisement

அண்ணா நகர் - 3,431

தேனாம்பேட்டை - 4,143

Advertisement

கோடம்பாக்கம் - 3,648

வளசரவாக்கம் - 1,444

ஆலந்தூர் - 699

 அடையாறு - 1,931

பெருங்குடி - 646

சோழிங்கநல்லூர் - 639

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 914

ஜூன் 17 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 34,245 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,565 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 422 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 15,257 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,370 மற்றும் 4,143 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 483 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement