This Article is From Jun 19, 2020

சென்னையில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 40 பேர் மரணம்; ஜூன் 19 மண்டலவாரி நிலவரம் என்ன?

ஜூன் 19 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 37,070 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 40 பேர் மரணம்; ஜூன் 19 மண்டலவாரி நிலவரம் என்ன?

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,686 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இதுவரை சென்னையில் கொரோனா காரணமாக 501 பேர் மரணமடைந்துள்ளார்கள்
  • தமிழகத்தில் இதுவரை 625 பேர் கொரோனாவால் மரணம்
  • தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,371 பேர். ஒட்டுமொத்த அளவில் 52,334 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,017 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 27,624 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 23,065 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 625 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (18.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,370

மணலி - 525

மாதவரம் - 999

தண்டையார்பேட்டை - 4,743

ராயபுரம் - 5,828

திரு.வி.க நகர் - 3,244

அம்பத்தூர் - 1,305

அண்ணா நகர் - 3,820

தேனாம்பேட்டை - 4,504

கோடம்பாக்கம் - 3,959

வளசரவாக்கம் - 1,571

ஆலந்தூர் - 781

 அடையாறு - 2,144

பெருங்குடி - 729

சோழிங்கநல்லூர் - 707

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 841

ஜூன் 19 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 37,070 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,686 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 501 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 16,882 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,743 மற்றும் 4,504 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 525 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


 

.