This Article is From Jun 22, 2020

ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் குறையாத கொரோனா தொற்று: மண்டலவாரியாக எகிறும் பாதிப்பு எண்ணிக்கை!

ஜூன் 22 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 41,172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Highlights

  • தமிழகத்தில் நேற்று மட்டும் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • இதுவரை தமிழகத்தில் 757 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 2,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,493 பேர். ஒட்டுமொத்த அளவில் 59,377 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,438 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 32,754 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 25,863 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 757 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (21.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,545

Advertisement

மணலி - 581

மாதவரம் - 1,135

Advertisement

தண்டையார்பேட்டை - 5,116

ராயபுரம் - 6,288

Advertisement

திரு.வி.க நகர் - 3,532

அம்பத்தூர் - 1,519

Advertisement

அண்ணா நகர் - 4,385

தேனாம்பேட்டை - 4,967

Advertisement

கோடம்பாக்கம் - 4,485

வளசரவாக்கம் - 1,719

ஆலந்தூர் - 880

 அடையாறு - 2,435

பெருங்குடி - 854

சோழிங்கநல்லூர் - 775

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 956

ஜூன் 22 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 41,172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22,887 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 601 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 17,683 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 5,116 மற்றும் 4,967 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 581 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement