நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 234 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 81 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
- நேற்று மட்டும் தமிழகத்தில் 3 பேர் கொரோனா காரணமாக உயிரிழப்பு
- சென்னைதான் தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் நேற்று 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 364 பேர். ஒட்டுமொத்த அளவில் 11,760 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 234 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,406 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,270 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 81 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (18.05.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 161
மணலி - 93
மாதவரம் - 133
தண்டையார்பேட்டை - 610
ராயபுரம் - 1,272
திரு.வி.க நகர் - 835
அம்பத்தூர் - 321
அண்ணா நகர் - 586
தேனாம்பேட்டை - 786
கோடம்பாக்கம் - 1,077
வளசரவாக்கம் - 532
ஆலந்தூர் - 84
அடையாறு - 391
பெருங்குடி - 92
சோழிங்கநல்லூர் - 101
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 43
மே 19 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 7,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,622 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 56 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 5,396 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,077 மற்றும் 835 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 84 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.