This Article is From May 20, 2020

சென்னையில் தீவிரமடையும் கொரோனா; ராயபுரத்தில் மட்டும் 1,500-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!!

மே 20 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 7,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 84 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

Highlights

  • சென்னையிலேயே ராயபுரம் மண்டலம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • ராயபுரத்தைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக பாதிப்பு
  • ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 552 பேர். ஒட்டுமொத்த அளவில் 12,448 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 489 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,895 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,466 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 84 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (19.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 182

Advertisement

மணலி - 100

மாதவரம் - 155

Advertisement

தண்டையார்பேட்டை - 723

ராயபுரம் - 1,423

Advertisement

திரு.வி.க நகர் - 900

அம்பத்தூர் - 330

Advertisement

அண்ணா நகர் - 610

தேனாம்பேட்டை - 822

Advertisement

கோடம்பாக்கம் - 1,137

வளசரவாக்கம் - 544

ஆலந்தூர் - 84

 அடையாறு - 413

பெருங்குடி - 96

சோழிங்கநல்லூர் - 109

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 44

மே 20 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 7,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,931 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 57 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 5,640 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,137 மற்றும் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 84 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement