This Article is From May 28, 2020

சென்னையில் 12,000-ஐ தாண்டிய கொரோனா தொற்று: மண்டல வாரியாக அதிகரிக்கும் பாதிப்பு!

மே 28 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 12,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 12,000-ஐ தாண்டிய கொரோனா தொற்று: மண்டல வாரியாக அதிகரிக்கும் பாதிப்பு!

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,000ஐ தாண்டியுள்ளது
  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது
  • சென்னையில் ஆலந்தூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது

தமிழகத்தில் நேற்று 817 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 558 பேர். ஒட்டுமொத்த அளவில் 18,545 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 567 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 9,909 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,500 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 133 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (27.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 369

மணலி - 168

மாதவரம் - 274

தண்டையார்ப்பேட்டை - 1,262

ராயபுரம் - 2,252

திரு.வி.க நகர் - 1,325

அம்பத்தூர் - 504

அண்ணா நகர் - 1,046

தேனாம்பேட்டை - 1,317

கோடம்பாக்கம் - 1,559

வளசரவாக்கம் - 777

ஆலந்தூர் - 165

 அடையாறு - 672

பெருங்குடி - 208

சோழிங்கநல்லூர் - 197

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 93

மே 28 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 12,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,559 மற்றும் 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 165 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

.