This Article is From May 31, 2020

ராயபுரத்தில் 2,500ஐ கடந்தது கொரோனா! சென்னை மண்டலவாரியாக முழு விவரம்!!

மே 31 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 13,980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் 2,500ஐ கடந்தது கொரோனா! சென்னை மண்டலவாரியாக முழு விவரம்!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 13,980 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. நேற்று மட்டும் 687 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (30.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 439

மணலி – 203

மாதவரம் - 345

தண்டையார்ப்பேட்டை - 1,536

ராயபுரம் - 2,589

திரு.வி.க நகர் - 1,494

அம்பத்தூர் - 550

அண்ணா நகர் - 1,180

தேனாம்பேட்டை - 1,557

கோடம்பாக்கம் - 1,709

வளசரவாக்கம் - 846

ஆலந்தூர் - 195

 அடையாறு - 773

பெருங்குடி - 241

சோழிங்கநல்லூர் - 234

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 89

மே 31 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 13,980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

.