This Article is From Apr 08, 2020

சென்னையில் கொரோனா நிலவரம் என்ன? - ஏப்ரல் 8 ஆம் தேதி மண்டலம் வாரியாக விவரம்

Covid-19 Chennai: சென்னையைப் பொறுத்தவரை மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

Covid-19 Chennai: மொத்தமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

Highlights

  • சென்னையில் மொத்தமாக 149 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
  • தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது
  • நேற்று மட்டும் தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது

Covid-19 Chennai: தமிழகத்தில் 69 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 690-ஆக உயர்ந்துள்ளது. இந்த 69 பேரில், 63 பேர் ஒரே இடத்துடன் தொடர்புடையவர்கள். மற்ற 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு சர்க்கரை நோய், இரத்த உயர் அழுத்தம் இருந்துள்ளது. 

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,630 பேரிடம் கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அவர்களில் 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 961 பேருக்கு பாதிப்பு இல்லை. 33 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். 

இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் பற்றி, பெருநகர் சென்னை மாநகராட்சி அளித்த தகவலின்படி, “சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில் திருவொற்றியூர் மண்டலத்தில் 4 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 12 பேருக்கும், ராயபுரத்தில் 40 பேருக்கும், திரு.வி.க நகரில் 22 பேருக்கும், அண்ணா நகரில் 15 பேருக்கும், தேனாம்பேட்டையில் 11 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும், வளசரவாக்கத்தில் 4 பேருக்கும், ஆலந்தூரில் 2 பேருக்கும், அடையாரில் 4 பேருக்கும், பெருங்குடியில் 5 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும்” கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

சென்னையைப் பொறுத்தவரை மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
 

Advertisement