This Article is From Apr 25, 2020

சென்னையில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா… அதிக பாதிப்பில் ராயபுரம்!

ஏப்ரல் 25 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா… அதிக பாதிப்பில் ராயபுரம்!

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 133 பேருக்கு கொரோனா
  • ராயபுரத்தைத் தொடர்ந்து தண்டையார்ப்பேட்டையில் 59 பேருக்கு கொரோனா
  • தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதை விடவும் நாளுக்கு நாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைக்கு மட்டும் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 52 பேருக்கு கொரோனா இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. 

அதேபோல நேற்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, தமிழகத்தில் மொத்தம் 1,755 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் மொத்தம் 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது 864 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (24.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 13

மணலி - 1

மாதவரம் - 3

தண்டையார்பேட்டை - 59

ராயபுரம் - 133

திரு.வி.க நகர் - 55

அம்பத்தூர் - 1

அண்ணா நகர் - 39

தேனாம்பேட்டை - 53

கோடம்பாக்கம் - 52

வளசரவாக்கம் - 13

ஆலந்தூர் - 9

 அடையார் - 10

பெருங்குடி - 8

சோழிங்கநல்லூர் - 2

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1

ஏப்ரல் 25 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

.