வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை நேற்று அறிவித்த உத்தரவில், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளித்திருந்து. மேலும், தமிழகம் முழுவதும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வடுமுறை அளித்திருந்தது.
அதன்படி, கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.
இந்நிலையில் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்புக்கான காரணம் எதையும் பள்ளி கல்வித்துறை குறிப்பிடவில்லை.