This Article is From Mar 21, 2019

மனித நேயம் இன்றும் இருக்கிறது... இங்கிலாந்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

‘எனக்கு உதவி செய்ய உங்களால் முடியுமா?’ என அந்த நண்பர்களைப் பார்த்து அந்த ஏழை கேட்டுள்ளார்.

மனித நேயம் இன்றும் இருக்கிறது... இங்கிலாந்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

உதவிக்கரம் நீட்டிய மனிதர்கள்

இங்கிலாந்தின் நியூகாஸ்டில் நகரத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு வைரலாகி வருகிறது.

நண்பர்கள் இணைந்து உணவு உண்டு கொண்டு இருக்கும் போது, அங்கு வீடு இல்லாத ஏழை ஒருவர் வந்துள்ளார்.

‘எனக்கு உதவி செய்ய உங்களால் முடியுமா?' என அந்த நண்பர்களைப் பார்த்து அந்த ஏழை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நண்பர்கள், 'எங்களிடம் பணம் இல்லை. இதுதான் என்னுடைய ஏடிஎம் கார்டு. இதனை உபயோகித்துக் கொள்ளுங்கள்' எனக் கூறி, அந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது ஏடிஎம் கார்டையும் கடவுச்சொல்லையும் கூறி, 20 பவுண்டு எடுத்துக் கொள்ள கூறினார்.

பின், அந்த உதவி கேட்டவர், 20 பவுண்டு எடுத்துக் கொண்டு, ஏடிஎம் கார்ட்டையும் ரூபாய் எடுத்த சீட்டையும் நண்பர்களிடமே வந்து கொடுத்துள்ளார்.

 

 
 

இதனை அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஜாக் என்பவர் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் சக மனித உயிரை மற்றொரு மனிதனே எடுக்கும் காலத்தில் இப்படி ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியவர்களின் குணம் பாராட்டக்குரியதே. 

 

Click for more trending news


.