Read in English
This Article is From Aug 19, 2020

நொய்டா துணை மின்நிலையத்தில் பெரும் தீ விபத்து!

Noida: செக்டர்-148ல் உள்ள நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் (NPCL) இன் துணை மின்நிலையத்தில் மழை பெய்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா

Noida Fire: நொய்டா துணை மின்நிலையத்தில் பெரும் தீ விபத்து!

Noida:

டெல்லி அருகே நொய்டாவில் மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. 

செக்டர்-148ல் உள்ள நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் (NPCL) இன் துணை மின்நிலையத்தில் மழை பெய்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மின்மாற்றிகள் தீப்பிடித்ததில் சேதமடைந்ததாகக் கூறப்படுவதால் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, பல தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு குவிந்துள்ளன. தொடர்ந்து, தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தானது, இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு உள்ள நொய்டா பகுதியில் வானில் தடினமான கருப்பு, புகை போன்ற பெரிய புகை எழுந்துள்ளதை காண முடிந்தது. 

Advertisement

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. 

Advertisement