Read in English
This Article is From Jul 17, 2018

குளியல் அறைக்குள் எட்டிப்பார்த்த நண்பனை கழுத்து அறுத்து கொலை

செரிங்கம்பள்ளி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் தனது நண்பருடன் மது அருந்தியபோது, நண்பனின் கழுத்தை அறுத்துள்ளார்

Advertisement
நகரங்கள்
Hyderabad:

ஹைதரபாத்: தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பனை வெட்டி சாய்த்த ஹைதரபாத் இளைஞர், காவல் துறையினரிடம் குற்றத்தை ஒப்புகொண்டார். 

செரிங்கம்பள்ளி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர், தனது நண்பருடன் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பனின் கழுத்தை அறுத்துள்ளார். 23வயது இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், வழியிலேயே இறந்துவிட்டார்.

இது குறித்து செரிங்கம்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரனையில், கடந்த மாதம் வீட்டிற்கு வந்த நண்பன், தனது தாய் குளிப்பதை எட்டிப்பார்த்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கார் ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
Advertisement