மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. ஐதிராபாதில் உள்ள நிஜாம் மருத்துவமனையில் 33 வயது பெண் ஒருவருக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது அவரின் வயற்றில் கத்திரிக்கோள் அலட்சியமாக வைக்கப்பட்டது.
வயற்றிலேயே சுமார் மூன்ற மாதங்களாக அந்த கத்திரிக்கோள் இருந்தது தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் வயற்றுவலி தொடர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்ததில் கத்தரிக்கோள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அதை எடுக்க இன்று காலை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை இன்று காலை நடத்தப்பட்டது.
‘எங்களுக்கு நோயாளிகளே முக்கியதுவம், அந்த கருவியை அகற்றி பாதிக்கப்பட்டவரின் உடல்நலத்தை எரிசெய்வதே முக்கியம்' என அந்த மருத்துவமனையின் இயக்குனர் கே. மனோகர் NDTV யிடம் கூறினார். மேலும் அவர் இந்த அசம்பாவிதத்தை பற்றி விசாரணை செய்யப்போவதாக தெரிவித்தார்.