Read in English
This Article is From Nov 14, 2018

பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட வாலிபர் கைது!

நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இச்சம்பவத்திற்க்கு தண்டனையாக ரூபாய் 200-ஐ அந்த வாலிபரிடமிருந்து பெறப்பட்டது.

Advertisement
நகரங்கள்
Hyderabad:

திருமணமான பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த 19 வயது மாணவனுக்கு 3 நாட்கள் சிறை தண்டனை விதிப்பு.

ஐதராபாத்தில் உள்ள சிறப்பு பெருநகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இச்சம்பவத்திற்க்கு தண்டனையாக ரூபாய் 200-ஐ அந்த வாலிபரிடமிருந்து பெறப்பட்டது.

சாயிக் முதாபிர் அகமது என்ற அந்த இளைஞர் பாதிக்கப்பட்ட பெண்னின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் அப்பெண்னின் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் டாக் செய்திருந்தார்.

அப்பெண்ணுக்கும் அவரது கணவர்கிடையில் பிளவை ஏற்படுத்தவே இத்தகைய செயல்களை அந்த வாலிபர் செய்ததாக கூறினார். ‘'க்ஷி'' (She) என்னும் குழு ஒன்று பெண்களை இணையத்தில் பின்தொடர்வோர் மற்றும் அச்சுறுத்துவோர்களை கவனித்து வந்ததால் தற்பொழுது அகமதுவை கைது செய்துள்ளனர்.

Advertisement

விசாரணையில் அவர்தான் அதை செய்தார் என நிரூபிக்கப்பட்டதால் மூன்றுநாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 

Advertisement