This Article is From Dec 19, 2018

‘பிரதமரானது மட்டுமல்ல, நிதி அமைச்சரானதும் விபத்துதான்..!’- மன்மோகன் ஓபன் டாக்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘நான் நாட்டின் பிரதமரானது மட்டுமல்ல, நிதி அமைச்சர் ஆனது கூட விபத்து தான்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்

‘பிரதமரானது மட்டுமல்ல, நிதி அமைச்சரானதும் விபத்துதான்..!’- மன்மோகன் ஓபன் டாக்

‘ஊடகத்தைச் சந்திக்க அஞ்சியதில்லை!’, மன்மோகன் சிங்

New Delhi:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘நான் நாட்டின் பிரதமரானது மட்டுமல்ல, நிதி அமைச்சர் ஆனது கூட விபத்து தான்' என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்மோகன், ‘நான் எதேச்சையாக பிரதமராக்கப்பட்டேன் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறேன். ஆனால், நான் நிதி அமைச்சர் ஆனது கூட விபத்துதான்.

மக்கள், நான் பிரதமராக இருந்த போது, மிகவும் அமைதியாக இருந்தேன் என்று கூறுகின்றனர். ஆனால், ஊடகங்களைச் சந்திக்க நான் என்றும் அஞ்சியதில்லை. நான் பிரதமராக இருந்தபோது தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தேன். அதேபோல, ஒவ்வொரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பிறகும் நான் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினேன். ஆனால், தற்போதைய பிரதமர் மோடி, ஊடகங்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்' என்று மோடியை விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து தான் நிதி அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்தது குறித்து மன்மோகன், ‘1991 ஆம் ஆண்டு, நாடு மிகப் பெரும் நெருக்கடியில் இருந்தது. அதை, திறம்பட சமாளித்தது எனக்கு இன்றளவும் மகிழ்ச்சி தருகிறது.

நான் பதவியிலிருந்த போது, பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. இந்த நாடு, என் மீது மிகவும் கரிசனத்துடன் இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்தாலும் அதற்கு ஈடாகாது' என்று முடித்துக் கொண்டார்.

.