This Article is From Nov 08, 2019

“Rajini-ஐ அன்றே எச்சரித்தேன்…”- பரபரப்பு பேட்டியைப் பற்றி திருமாவளவன் ஓப்பன் டாக்!

Thiruma on Rajini - "என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள்."

“Rajini-ஐ அன்றே எச்சரித்தேன்…”- பரபரப்பு பேட்டியைப் பற்றி திருமாவளவன் ஓப்பன் டாக்!

Thiruma on Rajini - "இந்த துணிச்சலை மனமாரப் பாராட்டுகிறேன். அவர் விழிப்புடன் இருக்கிறார்"

Thiruma on Rajini - எனக்கும், திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்; ஆனால், நாங்கள் சிக்கமாட்டோம் என நடிகர் ரஜினிகாந்த், திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப் பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வெளிப்படையாக பேசியுள்ளார். 

ரஜினியின் பேட்டி பற்றி திருமா பேசுகையில், “ரஜினிகாந்த், தன் மீது காவி சாயம் பூச முயற்சி நடப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்படி வெளிப்படையாக பேசியுள்ளதை நான் வரவேற்கிறேன். நான் இதே கோணத்தில்தான் முன்னரே அவரிடம் கூறினேன். தோழமை அடிப்படையில், நான் இந்த கருத்தை ரஜினியிடம் தெரிவித்திருந்தேன். திருவள்ளுவருக்கும் இப்படி நடப்பதாகக் கூறிய அவர், எனக்கும் காவி சாயம் பூச முடியாது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முடியாது. இந்த துணிச்சலை மனமாரப் பாராட்டுகிறேன். அவர் விழிப்புடன் இருக்கிறார்,” என்றார். 

முன்னதாக ரஜினி, “திருவள்ளூவர் ஒரு ஞானி, சித்தர். ஞானி, சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர்.

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் நானும் சிக்கமாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார்,” என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 

.