Read in English বাংলায় পড়ুন
This Article is From Sep 20, 2018

‘விலங்குகளை பேச வைப்பேன்!’- பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தாவின் புதிய வீடியோ

குரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என நித்யானந்தா தனது சீடர்களிடம் உரையாற்றும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

Advertisement
இந்தியா

விலங்குகளை பேச வைக்கும் மென்பொருள் குறித்து நித்யானந்தா கூறுகிறார்

New Delhi:

குரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என நித்யானந்தா தனது சீடர்களிடம் உரையாற்றும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பரபரப்புக்கு பெயர் போன நித்தியானந்தா தற்போது புதிய கூற்றினை முன் வைத்துள்ளார். அதில் தன்னால் குரங்குகள், மாடுகள் மற்றும் சிங்கங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

  .  

மேலும் அதில், குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு இருக்கும் உள்ளுறுப்புகள் கிடையாது. ஆனால், அவைகளுக்கு சில உணர்வுகளை அளிப்பதன் மூலம் அதனை மாற்றமுடியும். அந்த வகையில், விலங்குகளின் குரல் வளத்துக்கு காரணமான வோக்கல் கார்டு எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரி செய்தால் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை பேச வைக்கலாம் என்பதை மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் என்னால் விலங்குகளை பேச வைக்க முடியும் என நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். மனிதர்களைப் போலவே குரங்கு, மாடு, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளை இன்னும் ஓராண்டுக்குள் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் உங்களிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நான் பேசவைத்து காட்டுகிறேன் என நித்தியானந்தா தனது சீடர்களின் பலத்த கரகோஷங்கள் மத்தியில் கூறுகிறார்.

Advertisement