This Article is From Mar 26, 2019

‘லஞ்சம் வாங்கினால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்!’- சீமான் ஆவேச பிரசாரம்

நாம் தமிழர் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலுக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
தமிழ்நாடு Written by

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி, வடலூரில் நடந்தது

வடலூரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘எங்கள் ஆட்சியில் யாராவது லஞ்சம் வாங்கினால், விஷ ஊசி போட்டு கொல்லப்படுவர்' என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி, வடலூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பரப்புரை அற்றினார் சீமான். அவர் பரப்புரையின்போது பேசுகையில், ‘எங்களது ஆட்சியில் ஒரு பைசா லஞ்சம், ஊழல் வாங்கினால் விஷ ஊசி போட்டுக் கொன்றுவிடுவேன். ஒழிச்சிடுவேன். நடுங்க வேண்டும். காசு, லஞ்சம் கேட்க நடுங்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம். அந்த வார்த்தையே எங்கள் ஆட்சியில் இருக்காது. 

இந்தியாவிலேயே ஊழல், கையூட்டு ஒழிப்பதற்கென்று பாசறை வைத்திருக்கின்ற ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி மட்டும்தான்' என்று தெரிவித்தார். 

நாம் தமிழர் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலுக்கு ‘விவசாயி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement


 

Advertisement