This Article is From Jan 29, 2019

ஆசிரியர்கள் மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை: பள்ளிக்கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 95% ஆசிரியர்கள் இன்று பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றும், மாலைக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது 17பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement