Read in English
This Article is From Dec 24, 2019

பொருளாதார மந்த நிலைக்கு இதுதான் காரணம்: லிஸ்டு போட்டு கொடுத்த ஐஎம்எஃப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார மந்தநிலையில் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை கீதா தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

கீதா கோபிநாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

New Delhi:

சர்வதேச நாணைய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறை இயக்குநருமான கீதா கோபிநாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கீதா கோபிநாத்துடன் பிரதமர் மோடியுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டது. 

இந்தியாவின் பொருளாதார மந்தநிலையில் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை கீதா தெரிவித்தார்.

“மந்த நிலையில் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்று நம்புகிறேன். இது கவனிக்கப்படவேண்டிய மற்றொரு காரணியாகும். சீர்திருத்தங்களை மேற்கொள்வது இந்தியாவுக்கு முக்கியம் ஆனால் இதை அதிக தெளிவுடனும் அதிக உறுதியுடனும் செய்ய முடியும்” என்று 92வது மாநாட்டில் கீதா கோபிநாத் கூறினார். 

Advertisement

இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் சரக்கு மற்றும் சேவை வரி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 

Advertisement
Advertisement