This Article is From Apr 29, 2019

டெல்லி ஏர்போர்ட்டில் சர்வர் பழுதானது - நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்

நேற்று முன் தினம் 5 மணிநேரம் ஏர் இந்தியா சர்வரில் கோளாறு ஏற்பட்டது. அதேபோல் நேற்று காலை ஒரு மணிநேரம் சர்வர் பழுதானது. அதேபோல் இன்று காலையும் சர்வர் பழுதானது.

டெல்லி ஏர்போர்ட்டில்  சர்வர்  பழுதானது - நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்

சர்வர் பழுதானது என்று பொது அறிவிப்பு செய்யப்பட்டது (File Photo)

New Delhi:

டெல்லி விமான நிலையத்தில் இன்று அதிகாலை குடிவரவுக்கான சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் சிக்கலை எதிர்கொண்டனர். ஏர் இந்தியா அதிகாரிகள், நள்ளிரவு 12.20 மணியளவில் சர்வரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும். இந்த கோளாறு 40 நிமிடங்கள் வரை நீடித்தததாகவும் பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 1 மணிவரை ஏர் இந்தியா விமானங்கள் சர்வர் தொழில்நுட்பக் கோளாறினை தீர்க்க முடியாமல் திணறியது.

சர்வர் பிரச்னை காரணமாக விமான நிலையத்தில் பொது அறிவிப்பு செய்யப்பட்டது. பணியாளர்கள் கையேடு சோதனை செயல்முறை செய்ய தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். 

நேற்று முன் தினம் 5 மணிநேரம் ஏர் இந்தியா சர்வரில் கோளாறு ஏற்பட்டது. அதேபோல் நேற்று காலை ஒரு மணிநேரம் சர்வர் பழுதானது. அதேபோல் இன்று காலையும் சர்வர் பழுதானது.

இந்தியாவின் பரபரப்பான விமான நிலையமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது.

ட்விட்டரில் பயணிகள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
 

.