This Article is From Jan 13, 2019

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 நாட்களில் 28 தமிழக மீனவர்கள் கைது

கைதான மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 நாட்களில் 28 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை அருகே கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நெடுந்தீவுப் பக்கம் எல்லை தாண்டி வந்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களிடம் இருந்த 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் பின்னர், ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் மேலும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி அவர்கள் மீன் பிடித்ததாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் இலங்கை கடற்படையால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதான மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.