This Article is From Aug 16, 2018

ஏர் இந்தியா விமானத்தில் விலையுயர்ந்த தங்க கட்டிகள் பறிமுதல்!

47,69,330 ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

ஏர் இந்தியா விமானத்தில் விலையுயர்ந்த தங்க கட்டிகள் பறிமுதல்!
Mumbai:

மும்பை: ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையின் கீழ் 15 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அபு தாபியில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஏர் இந்தியா விமானத்தை சுங்க அதிகாரிகள் நேற்று சோதனை செய்துள்ளனர். அப்போது, விமானத்தில் உள்ள பயணிகள் இருக்கையின் கீழ் 1.74 கிலோ எடையுள்ள 15 தங்க கட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. 47,69,330 ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அபு தாபியில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணிகளின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த சுங்க அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.