Read in English
This Article is From Jul 18, 2018

கதவை திறக்க பெற்றோர்க்கு அனுமதி மறுத்ததால், ஆம்புலன்ஸில் உயிரிழந்த இரண்டு மாத குழந்தை

ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லப்பட்ட குழந்தைக்கு மூச்சு திணரல் ஏற்பட்டதால், வாகனத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Advertisement
இந்தியா ,
Raipur:

ராய்பூர்: ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லப்பட்ட குழந்தைக்கு மூச்சு திணரல் ஏற்பட்டதால், வாகனத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் தங்களது இரண்டு மாத குழந்தைக்கு, இருதய சிகிச்சை செய்வதற்காக ராய்ப்பூர் வந்தடைந்த தம்பதியர், அரசு சேவையில் இயங்கும் சஞ்சீவனி எக்ஸ்ப்ரஸ் ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்ல குழந்தையுடன் ஆம்புலன்ஸில் ஏறிய தம்பதியர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்புலன்ஸ் ஜன்னல் திறக்க முடியாததால், குழந்தைக்கு மூச்சு திணரல் ஏற்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை அம்பிக்கா குமார், கதவை திறக்க முயன்ற போதும், அரசு வாகனதிற்கு சேதம் விளைவிக்க முடியாது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தடுத்துள்ளார். இதனால், வாகனத்திலேயே இரண்டு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது

எனினும், இது குறித்து ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் நிறுவனத்தை தொடர்பு கொள்கையில், குழந்தை முன்னரே இறந்துவிட்டதால், ஆம்புலன்ஸ் சேவையின் மிது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Advertisement