Read in English
This Article is From Jul 19, 2018

மைசூருவில் 5 நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 சகோதரிகள்

மைசூருவில் 3 சகோதரிகளை, பல மாதங்களாக 5 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

Advertisement
நகரங்கள்
Mangaluru:

மைசூருவில் 3 சகோதரிகளை, பல மாதங்களாக 5 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அபான் (30) என்ற அவர், மங்களூருவில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. மேலும் 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மைசூருவின், உதயகிரி பகுதியைச் சேர்ந்த, 16,17 மற்றும் 18 வயதான மூன்று சகோதரிகள், மாண்டியா, மங்களூரு, பெங்களூரு என பல இடங்களில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனர். 

மைசூருவைச் சேர்ந்த ஒடனாடி சேவா சமஸ்தே என்ற சமூகத் தொண்டு அமைப்பு, இந்த விஷயத்தை கையில் எடுத்த பிறகு தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த மூன்று பெண்களின் தாய், புகார் அளித்த பிறகு தான், தொண்டு அமைப்பும் விசாரணையில் இறங்கியது. 

Advertisement

அந்த பெண்களின் வீட்டின் அருகே வசித்து வந்த நபர் ஒருவர், அவர்களை மாண்டியா, மங்களூரு, பெங்களூரு என அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவர்களுக்கு , பரிசுகள் தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு பின் சில மாதங்களாக அந்த பெண்கள் காணாமல் போனதால், அவரது தாய் தொண்டு அமைப்பை நாடியுள்ளார். பின்னர் உதயகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டுபிடித்து, ஒடனாடி சேவா சமஸ்தே அமைப்பின் மூலம் மன நல ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து, குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement
Advertisement