Read in English
This Article is From Jul 27, 2020

ராஜஸ்தான் அரசியல் குளறுபடி: மாயாவதியால் காங்கிரஸூக்கு புதிய தலைவலி!

ஆறு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுடன் இணைந்திருந்தனர், இது இந்த வரையறையின்படி தொழில்நுட்பங்களின் சிக்கலுக்கு வழிவகுக்கும்,

Advertisement
இந்தியா

ராஜஸ்தான் அரசியல் குளறுபடி: மாயாவதியால் காங்கிரஸூக்கு புதிய தலைவலி! (File photo)

Jaipur:

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களின் போர்க்கொடிக்கு மத்தியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் தரப்பில் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது காங்கிரஸூக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் பாஜக தரப்பில், காங்கிரஸூடன் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் இணைந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குடன் தற்போது, பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்துகொள்கிறது. இதைத்தொடர்ந்து, மாயாவதி பாஜகவுடன் இணைந்து, காங்கிரஸூக்கு எதிராக சட்டரீதியிலான மோதலுக்கு தயாராகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷி முன் எம்எல்ஏக்கள் இணையும் போது பாஜக ஆட்சேபனை தெரிவித்தது. சபாநாயகர் ஆட்சேபனையை நிராகரித்த நிலையில், அந்த முடிவை எதிர்த்து புதிய மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் பாஜகவிடம் கோரியுள்ளது.

Advertisement

இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்ட பகுஜன் சமாஜ் கட்சி நேற்று ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. 

முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி நீடிக்க இந்த ஆறு எம்எல்ஏக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவருக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில், 6 எம்எல்ஏக்களின் பலத்தை இழந்தால், பாஜக அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பாக அமைந்துவிடும். பாஜகவில் 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். சச்சின் பைலட் அதிருப்தி அணியில் 19 பேர் உள்ளனர். இவை தவிர்த்து, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் எதிர்கட்சியில் 97 உறுப்பினர்கள் உள்ளனர். 

Advertisement


உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான கட்சி இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களை மாநிலங்களவை தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களாக கருத தேர்தல் ஆணையத்தை அணுகியிருந்தது, ஆனால் அதனை சபாநாயகரே முடிவு செய்ய முடியும் என்பதால் தேர்தல் ஆணையம் அதில் தலையிட மறுத்துவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தேசியக் கட்சி என்பதால், ஆறு எம்.எல்.ஏ.க்களின் நிகழ்வில் மாநில அளவில் எந்த இணைப்பும் இருக்க முடியாது என்று கூறி, ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய அளவில் அவர்கள் அதை மீறினால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் ”என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement