வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில், கொரோனா வைரஸால் ஒரேயொருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்காக ஏப்ரல் 30-ம்தேதி வரையில் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த தகவலை மாநில அரசின் தலைமைச் செயலர் நரேஷ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மாநில அரசுப் பேருந்துகள் மட்டும் இயங்கும். இதேபோன்று கட்டிட பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு அனுமதியளித்துள்ள அரசு, வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்ற தடை விதித்துள்ளது.
தவாங், தெசு, ஆலோ, பசிகாட், ஜிரோ, கோன்சா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் ஒரேயொருவருக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்து அங்கு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக இன்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,173-ஆக உயர்ந்துள்ளது. இன்றுமட்டும் 58 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் அளவுக்கு யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. 63,380 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளனர்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|