Read in English
This Article is From Jun 01, 2019

கேரளாவில் 6-ம்தேதி பருவமழை தொடங்குகிறது!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

நடப்பாண்டில் பருவமழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

டெல்லியில் 46 டிகிரி அளவுக்கு வெயில் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

தென்னிந்தியாவில் பருவமழை ஜூன் 6-ம்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'தென்னிந்தியாவின் அரபிக் கடல், தென்மேற்கு தென் கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதி, அந்தமான், அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய இடங்களில் மழை பெய்யும். அடுத்த 2-3 நாட்களில் அரபிக்கடலின் பெரும்பான்மை பகுதிகளில் மழை பெய்யக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சராசரியாக பெய்யும் மழையில் 96 சதவீதத்தை இந்த பருவமழையில் எதிர்பார்க்கலாம். ஜூன் மாதத்தில் தொடங்கும் பருவமழை அடுத்த 4 மாதங்களில் சராசரியாக 89 சென்டி மீட்டர் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பெய்யும் மொத்த மழையில் 70 சதவீதம் பருவமழையில்தான் கிடைக்கிறது. தென்னிந்தியாவின் கடல் பகுதயில் அடுத்த 3-5 நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

Advertisement

டெல்லியை பொறுத்தளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அங்கு 46 டிகிரி அளவுக்கு வெயில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement