বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 28, 2020

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: இறுதி கட்ட மனித சோதனைக்கு இந்தியாவில் 5 இடங்கள் தயார்!

முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.

Advertisement
இந்தியா

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: இறுதி கட்ட மனித சோதனைக்கு இந்தியாவில் 5 இடங்கள் தயார்! (Representational)

Highlights

  • On July 20, scientists announced Oxford Covid vaccine appears safe
  • In India, two indigenous vaccines have reached phase-1 of human trials
  • Serum Institute of India is said to be largest vaccine maker in the world
New Delhi:

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளுக்காக நாடு முழுவதும் ஐந்து இடங்கள் தயாராக உள்ளதாக உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ரேனு ஸ்வரூப் தெரிவித்துள்ளார். 

இது ஒரு முக்கியமான கட்டமாகும், ஏனெனில் இந்தியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் நாட்டிற்குள் தரவு வைத்திருப்பது அவசியம் என்று ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அதை உற்பத்தி செய்ய ஆக்ஸ்போர்டு மற்றும் அதன் பங்குதாரரான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.

Advertisement

உயிரி தொழில்நுட்பத் துறை ஒவ்வொரு உற்பத்தியாளருடனும் நெருக்கமாக செயல்படுகிறது மற்றும் சீரம் நிறுவனத்தின் 3 ஆம் கட்ட சோதனை முக்கியமானது, ஏனெனில் தடுப்பூசி வெற்றிகரமாக இருக்க வேண்டும், 

இதுதொடர்பாக உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி) செயலாளர் ரேணு ஸ்வரூப் கூறம்போது, இந்தியாவில் எந்தவொரு கொரோனா தடுப்பூசி முயற்சியின் ஒரு பகுதியாக உயிரி தொழில்நுட்பத் துறை உள்ளது. அது நிதியளிப்பதாக இருக்கட்டும், ஒழுங்குமுறை அனுமதிகளை எளிதாக்குவதாக இருக்கட்டும், அல்லது நாட்டிற்குள் இருக்கும் வெவ்வேறு நெட்வொர்க்குகளுக்கு அணுகலை அளிப்பதாக இருக்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

உயிரி தொழில்நுட்பத் துறை தற்போது மூன்றாவது கட்ட மருத்துவ தளங்களை அமைத்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே அவற்றில் பணிபுரியத் தொடங்கிவிட்டோம், இப்போது 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு ஐந்து இடங்கள் தயாராக உள்ளன, ”என்று ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனைகளின் 2 மற்றும் 3 கட்டங்களை நடத்துவதற்கு புனேவை தளமாகக் கொண்ட எஸ்.ஐ.ஐ இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி கோரியுள்ளது.

Advertisement

தடுப்பூசிக்கான அனைத்து அனுமதிகளும் பெற்றவுடன் கணிசமான அளவுகளுடன் தயாராக இருப்பதால், இறுதி ஒப்புதலுக்கு முன்பே தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தொடங்குவதாக ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது.

Advertisement