This Article is From Sep 13, 2018

காஷ்மீர் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் கருத்துக்கு இந்தியா கவலை

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் 39-ஆவது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

காஷ்மீர் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் கருத்துக்கு இந்தியா கவலை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவரின் கருத்துக்கு இந்தியா கவலை

United Nations:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் புகார்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்செல் பாச்லெட் கூறியதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரான மிச்செல் பாச்லெட், கடந்த திங்கட்கிழமை காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உரையாடினார். அப்போது, மனித உரிமை மீறல் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து வெளிப்படையான விவாதமும், தீவிரமான ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டியுள்ளது. உலகில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் நீதியும், மரியாதையும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று மிச்செல் தெரிவித்தார்.

அதனை அடுத்து, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் 39-ஆவது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ராஜீவ் சந்தர் பேசிய போது, கடுமையான சவால்களை இந்த அமைப்பு எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதம் தான் மனித உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய அத்துமீறலாக இருந்து வருகிறது. நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு மனித உரிமை மீறல் பிரச்னைகளை வெளிப்படையான முறையில் தீர்த்து வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு மிச்செல் பேசுவார் என்று நம்புகிறோம் என்று ராஜீவ் சந்தர் தெரிவித்துள்ளார்
 

.