This Article is From Aug 31, 2018

ஆசிய போட்டிகள்: படகுப் போட்டியில் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள்!

13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது

ஆசிய போட்டிகள்: படகுப் போட்டியில் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது. 13வது நாளான இன்று, பாய்மரப் படகுப் போட்டிகள் நடைப்பெற்றன. அதில், மூன்று பதக்கங்களை கைப்பற்றி இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்

பாய்மரப் படகுப்போட்டியின் பெண்களுக்கான 49er FX பிரிவில், இந்தியாவின் வர்ஷா கவுதம், சுவேதா ஷர்வேகர் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்

அதைப் போன்று, ஆண்களுக்கான 49er பிரிவில், இந்தியாவின் வருண் தக்கர், கணபதி செங்கப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்

மற்றொரு பாய்மரப் படகுப்போட்டியான ஓபன் லேசர் 4.7 பிரிவில், இந்தியாவின் ஹர்ஷித்தா தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்

இதன் மூலம், பாய்மரப் படகுப் போட்டிகளில், இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், 13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

.