বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 26, 2019

விமானப்படை தாக்குதலில் 25 தீவிரவாத பயிற்சியாளர்கள் பலி!

இந்தாண்டில் இந்தியா நடத்திய மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது

Advertisement
இந்தியா Edited by

விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானம் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 25 தீவிரவாத பயிற்சியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 5 நட்சத்திர விடுதி போன்று அமைக்கப்பட்ட தீவிரவாத முகாம்களுக்கு மாறியுள்ளனர்.

அவர்கள் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோதுதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறைந்தது 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு தங்கியிருந்த தீவிரவாதிகள் அனைவரும், அதி நவீன ஆயுதங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள்.

நூற்றுக்கணக்கான தற்கொலைப் படை தீவிரவாதிகளும் அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகி இருந்தனர். அவர்களை உருவாக்கியதில் தீவிரவாத பயிற்சியாளர்களின் பங்கு முக்கியமானது. இவர்கள் மொத்தம் 25 பேர் பயிற்சி முகாமில் தங்கியிருந்தனர். விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் பயிற்சியாளர்கள் 25 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Advertisement

தீவிரவாதிகளை கொன்றதை விடவும், பயிற்சியாளர்கள் கொல்லப்பட்டிருப்பது முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. ஏனென்றால் தீவிரவாதிகளை விடவும், அதற்கு பயிற்சி அளிப்பவர்கள் இன்னும் அதிகமானோரை உருவாக்க கூடும். அந்த வகையில் பயிற்சியாளர்கள் முக்கிய அச்சுறுத்தலாக இருந்தனர்.தீவிரவாத பயிற்சி முகாம் மீதுதான் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000-ரகத்தை சேர்ந்த 12 விமானங்கள், பாலகோட்டில் குண்டுமழை பொழிந்துள்ளன.

பாலகோட் தீவிரவாத முகாமை, புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் மைத்துனர்தான் நிர்வகித்து வந்துள்ளார். இதே இடத்தில் ஆண்டுக்கணக்கில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்திருக்கின்றனர். எனவேதான் பாலகோட் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

இங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத்தினர். நவீன ரக துப்பாக்கிகள், யுத்த தந்திரங்கள், வெடி குண்டுகளை தயாரிப்பது, தற்கொலைப்படை தாக்குதல், ராணுவ வாகனங்களை ஹைஜாக் செய்வது, மிக மோசமான சுற்றுச்சூழலில் தற்காத்துக் கொள்வது போன்ற மிக கடுமையான பயிற்சிகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisement

மேலும் படிக்க : 90 செகன்ட்டில் 300 தீவிரவாதிகளை அழித்தது எப்படி? – ஸ்கெட்ச் போட்டது யார்?

Advertisement