வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார் அபினந்தன்! LiveUpdates
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை (IAF Wing Commander Abhinandan Varthaman) இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்
கமாண்டர் அபினந்தன் (Abhinandan Varthaman), ரெட் க்ராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவில்லை.
New Delhi:
India-Pakistan Tension Live Updates: பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அமைதியை வலியுறுத்தும் நோக்கில் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் வாகா எல்லையில் அபினந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்துள்ளார். அதே நேத்தில் கமாண்டர் அபினந்தன், ரெட் க்ராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவில்லை.
புதன் கிழமை காலை இந்திய - பாகிஸ்தானுக்கு இடையில் விமானத் தாக்குதல் நடைபெற்றபோது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் பிடித்து, தங்களது பிடியில் வைத்துள்ளது.
விங் கமாண்டர் அபினந்தன் விடுவிப்பு குறித்தான லைவ் அப்டேட்ஸ்:
Mar 01, 2019 21:20 (IST)
பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Mar 01, 2019 21:11 (IST)
இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மாலை 5 மணி அளவில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவித்த பாகிஸ்தான், இரண்டு முறை நேரத்தை மாற்றியுள்ளது.
Mar 01, 2019 18:20 (IST)
விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனின் போர் விமானம், பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் விபத்துக்குள்ளான உடன், பாராஷூட் மூலம் வெளியே குதித்தார். சாதுர்யமாக அருகிலிருந்த குட்டையில் விழுந்த அபினந்தன், தன்னிடமிருந்து ஆவணங்களை கடித்து விழுங்கினார்.
Mar 01, 2019 16:09 (IST)
இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டாவது குழு வாகா-அட்டாரி எல்லையை அடைந்தது