This Article is From Sep 24, 2018

ஒலிம்பியாட்டிற்கான இந்திய செஸ் அணி அறிவிப்பு

இந்திய ஓபன் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

ஒலிம்பியாட்டிற்கான இந்திய செஸ் அணி அறிவிப்பு

இந்திய ஓபன் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட இந்த அணியில், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் முதல் போர்டிலும், கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்னா இரண்டாவது போர்டிலும், கிராண்ட் மாஸ்டர் விதித் சந்தோஷ் மூன்றாவது போர்டிலும் விளையாட உள்ளனர்.

மேலும், நான்காவது இடத்தில் கிராண்ட் மாஸ்டர் அதிபன் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதைப்போல, பெண்கள் அணியை பொறுத்தவரை, கொனேரே ஹம்பி முதலாவதாகவும், ஹரிகா த்ரோனாவாலி, டானியா சச்தேவ், ஈஷா, பத்மினி ரவுட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.