Read in English
This Article is From Aug 22, 2018

கனடாவில் “திரும்பிப் போ” என்று கூறி இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

வாகன பார்கிங் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டதால், ராகுல் குமார் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

Advertisement
Indians Abroad
Toronto:

டொரண்டோ: கனடாவில் வசித்து வரும் இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் குமார் என்ற இந்தியர், கனடாவில் வசித்து வருகிறார். வாகன பார்கிங் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டதால், ராகுல் குமார் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பார்க்கிங் பிரச்சனையால், கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ராகுல் குமாரைப் பார்த்து, “உன் நாட்டிற்கு திரும்பிப் போ” எனவும், தகாத வார்த்தைகளினாலும் தாக்கியுள்ளார்.இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

மேலும், இந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோர போவதில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தினால் டொரண்டோ பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
Advertisement