This Article is From Aug 31, 2018

ஆசிய போட்டிகள்: இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதி போட்டியில், ஹாங்காங் அல்லது ஜப்பான் அணியுடன் இந்தியா மோத உள்ளது

Advertisement
Others Posted by

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 13வது நாளான இன்று, பெண்களுக்கான ஸ்குவாஷ் அரை இறுதி போட்டி நடைப்பெற்றது.

இந்த போட்டியில், இந்தியா - மலேசியா ஆகிய அணிகள் மோதின. இந்தியாவைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் கொண்ட குழு 2-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது

இதன் மூலம், மகளிருக்கான குழு ஸ்குவாஷ் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதனால், தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதி போட்டியில், ஹாங்காங் அல்லது ஜப்பான் அணியுடன் இந்தியா மோத உள்ளது.

Advertisement