Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 19, 2020

கொரோனா பாதிப்புக்கு இந்தியாவில் 4வது உயிரிழப்பு!

ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் நான்காவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பாக 72 வயது முதியவர் ஒருவர் ஜெர்மனி நாட்டில் இருந்து இத்தாலி வழியாக இந்தியா திரும்பியுள்ளார். இவர் கடுமையான மார்பு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முன்னதாக, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 169 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 145 பேர் இந்தியர்கள். அதில், 24 பேர் வெளிநாட்டினர்கள்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தோடு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Advertisement
Advertisement