বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 14, 2019

நாய்க்காக கடி வாங்கியவர் - மத்திய பிரதேசத்தில் விநோதம்

மத்திய பிரதேசத்தின் சஞ்சய் நகரில் பாபி என்பவர் நாயை பைப்பை வைத்து அடித்துள்ளார்.

Advertisement
விசித்திரம் Translated By

மத்திய பிரதேசத்தில் நாயை காப்பாற்ற ஒரு வாலிபர் கடி வாங்கியுள்ளார்

Indore:

மனிதர்களின் செல்ல பிராணிகளில் முதன்மையானது நாய். அது குடும்பத்தில் ஒரு நபராகவே மாறிவிடுகிறது இந்த செல்ல பிராணி. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் எக்கச்சக்க அன்பை பொழிவது இந்த நாய்கள். அப்படிப்பட்ட ஒரு நாய்க்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வினோதமான ஒரு செயல் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சஞ்சய் நகரில் பாபி என்பவர் நாயை பைப்பை வைத்து அடித்துள்ளார். அதனை கண்ட ரவி சவுகான், பாபியிடம் இருந்து நாயை காப்பாற்ற எண்ணியுள்ளார்.

அப்போது, ரவியை பாபி கீழே தள்ளி ரவியை கடித்துள்ளார். அந்த நாய் அந்த இடத்தில் இருந்து ஓடியது.

Advertisement

இதனை அறிந்த போலீஸ், வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

‘இந்திய சட்டத்தின் கீழ் 324 பிரிவில் பாபி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்' என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

 

 

Advertisement