This Article is From May 11, 2020

நாளை எந்தெந்த மாநிலங்களில் ரயில்கள் இயங்கும்? முழு பட்டியல்

, டிக்கெட்டுகள் இணைய வழியில், ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். அல்லது மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், முகவர்கள் மூலம் முன்பதிவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

நாளை எந்தெந்த மாநிலங்களில் ரயில்கள் இயங்கும்? முழு பட்டியல்

தொற்றுக்கான  அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்

New Delhi:

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் வருகிற 17ம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த முழு முடக்க நடவடிக்கையானது முடிவடையக்கூடிய நிலையில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகப் பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது. முதல் கட்டமாக புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாளை முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ரயில் நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுக்கான  அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இயங்கும் ரயில்களின் அட்டவணை இங்கே:

List Of Trains And Running ... by NDTV on Scribd

பயணத்திற்கான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணியளவில்  துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட்டுகள் இணைய வழியில், ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். அல்லது மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், முகவர்கள் மூலம் முன்பதிவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பல மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது. தற்போது முழு முடக்க நடவடிக்கையானது முடிவடைய உள்ள நிலையில் நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வரை நாடு முழுவதும் 67 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.