This Article is From Aug 14, 2020

வெளி மாநில மற்றும் நாடுகளிலிருந்து வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை தொடருமா? - அரசு விளக்கம்

"e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது"

Advertisement
தமிழ்நாடு Written by

"நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன."

Highlights

  • தமிழகத்தில் தற்போது இ-பாஸ் இருந்தால்தான் மாவட்டம் மாவட்டம் செல்ல முடியும்
  • வரும் திங்கள் முதல் அதில் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன
  • வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக உள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3.20 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் புதியதாக கண்டறியப்படுகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணமிருந்தன. எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் e-Pass விண்ணப்பங்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க  (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் அரசு வெளி மாநில மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை பற்றி, ‘பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க இன்று (14.8.2020) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்' என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

Advertisement